தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: பெட்ரோல் பங்கில் 73 லட்சம் மோசடி செய்த பெண் கைது!

Crime: பெட்ரோல் பங்கில் 73 லட்சம் மோசடி செய்த பெண் கைது!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 15, 2023 11:43 AM IST

கௌசல்யா பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்திய ரூபாய் 73,00,000 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

மோசடியில் ஈடுபட்ட பெண்கள் கைது
மோசடியில் ஈடுபட்ட பெண்கள் கைது

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார் (55). இவர் கிணத்துக்கடவு பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். 

இவரது பெட்ரோல் பங்கில் கடந்த 2019‌ முதல் நான்கு வருடங்களாக கௌசல்யா என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யா பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்திய ரூபாய் 73,00,000 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பெட்ரோல் பங்ன் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த வழக்கில் மோசடி செய்த நபரான கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மதிவாணன் மனைவி கௌசல்யா (24) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

மேலும் அவரிடம் இருந்து நான்கு சக்கர வாகனம்-1, நில பத்திரம்-2, இரண்டு சவரன் செயின் மற்றும் ரூபாய் 90,000 பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கௌசல்யாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்