TTF வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்
TTF Vasan Case: நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய பிரபல யூடியூபர் TTF வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்தது. இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டிடிஎஃப் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று (அக்.05) விசாரணை நடத்தினார். அப்போது, 20 லட்சம் மதிப்பு உள்ள பைக்கில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடை அணிந்திருந்ததால் டிடிஎஃப் வாசன் உயிர் தப்பியுள்ளார். டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை பின் தொடர்பவர்களில் 45 லட்சம் பேர் சிறார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்
டிடிஎஃப் வாசனை பின்பற்றும் சிறுவர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதாகவும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவருக்கு ஜாமீன் வழங்கக்க கூடாது எனவும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விளம்பரத்திற்காக இது போன்ற செயலில் ஈடுபடும் டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்துவிடுங்கள் என்றும் அவரது யூடியூப் சேனலை முடக்க வேண்டும் எனவும் நீதிபதி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். டிடிஎப் வாசனுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன், விலை உயர்ந்த பைக்குகளில் ஊர் ஊராக பயணம் செய்து தன்னுடைய அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இதற்காக 'Twin Throttlers' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் அதிவேகமாக பைக்கை ஓட்டி சிறுவர்கள், இளைஞர்களை கவர்ந்துள்ளார். இவருக்கு சினிமா நடிகர்களை போல் ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். இவரது யூடியூப் சேனலுக்கு பல லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். அதோடு 2k கிட்ஸூம் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே பலமுறை போலீசார் நடவடிக்கைக்கு எடுத்துள்ளனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு அபராதமும் கட்டியிருக்கிறார். இந்தச் சூழலில் தான் காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மக்களை அச்சுறுத்தும்படி பைக் ஓட்டியபோது விபத்தில் சிக்கினார் டிடிஎஃப் வாசன். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து டிடிஎஃப் வாசன் மீது காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தான் வாசனின் ஜாமீன் மனு தள்ளிபடி செய்யப்பட்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்