TOP 10 NEWS: ’வேலுமணி மீது பாய்ந்த வழக்கு முதல் செந்தில் பாலாஜி வழக்கு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு, செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் ஆக உத்தரவு, தேவநாதன் யாதவ் காவல் நீட்டிப்பு, தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம், போதை பழக்கம் குறித்து மருத்துவர் ராமதாஸ் கவலை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!

TOP 10 NEWS: ’வேலுமணி மீது பாய்ந்த வழக்கு முதல் செந்தில் பாலாஜி வழக்கு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.வேலுமணி மீது வழக்குப்பதிவு
சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ஆம் ஆண்டு விதிகளை மீறி டெண்டர் ஒதுக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. மழைநீர் வடிகால் பணிகள், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் 26.61 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார்.
2.தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும். வரும் 25ஆம் தேதிக்கு பிறகே மழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்.
