TNPSC Chairman: ’சங்கி சகவாசம் உள்ளவருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியா?’ திமுக அரசு மீது ஜவாஹிருல்லா வேதனை!
TNPSC Chairman: தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணைய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

சங்கித் தொடர்புள்ளவருக்கு சமூக நீதியை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பொறுப்பை ஐந்தாண்டுகளுக்கு வழங்குவது வேதனைக்குரியது என திமுக கூட்டணியில் உள்ள ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கூறி உள்ளார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸை தமிழ்நாடு அரசு நேற்று நியமனம் செய்து உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது. தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணைய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
யார் இந்த பிரபாகர் ஐ.ஏ.எஸ்?
1989ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பயிற்சியை நிறைவு செய்த பிரபாகர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். காலஞ்சென்ற திமுக தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, அவரது செயலாளராக இருந்தவர் பிரபாகர்.