எல்லோரும் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது! அண்ணா நினைவிடத்தில் சசிகலா பேட்டி
”இப்போது ரொம்ப பக்கத்தில் நெருங்கிவிட்டோம், தனித்தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லது இல்லை”
பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், கருணாநிதியை தீயசக்தி என எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொல்லி இருக்கிறார்கள். இரு தலைவர்கள் சொன்னதையும் மனதில் வைத்து செயல்பாடு இருக்க வேண்டும். எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற வார்த்தையைதான் எப்போதும் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்; இப்போதும் அதை சொல்கிறேன்.
ட்ரெண்டிங் செய்திகள்
இப்போது ரொம்ப பக்கத்தில் நெருங்கிவிட்டோம், தனித்தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லது இல்லை, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஆரம்ப காலத்தில் இருந்து இருந்து சொல்லி வருகிறேன். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டிய சூழல் எனக்கு நன்றாக தெரிகிறது. எல்லோரும் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார். இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் பாஜகவை சந்தித்தது குறித்த கேள்விக்கு, அதிமுக என்பது என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் இதுமாதிரியான தவறுகள் நடக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னத்தை கடலுக்குள் சென்று அமைப்பது நல்லது இல்லை என்றும் இது மீனவர்களை பாதிக்கும் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் என்றும் தெரித்த சசிகலா, ஆசை இருந்தால் அவரின் சமாதியிலேயே நினைவுச்சின்னத்தை வைக்கலாம் என்று கூறினார். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிதியில்லாததால் நிறுத்தும் திமுக, பேனா செய்வதற்கு நிதி எங்கிருந்து வருகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பெய்த திடீர் மழையால் சிறுகுறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்முதல் நிலையங்களில் உடனடியாக நெல்லை அரசு வாங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
டாபிக்ஸ்