Kanchipuram Murder : தூங்கி கொண்டிருந்த தாய்.. அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மகன்.. தலை நசுங்கி இறந்த சோகம்!
காஞ்சிபுரம் அருகே தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியில் வசிப்பவர் அரிகிருஷ்ணன் (65). இவருடைய மனைவி நீலாவதி (55). இவர்களுக்கு பேரருளாளன் (37), யோகாநந்தம் (35) என 2 மகன்கள். அரிகிருஷ்ணன் சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
பேரருளாளன் மனநோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று நீலாவதியின் வீட்டுக்கு சென்ற அக்கம்பக்கத்தினர் நீலாவதி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நீலாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மூத்த மகன் பேரருளாளன் தன் தாய் நீலாவதியிடம் சண்டையிட்டதாகவும், மேலும் நீலாவதி தூங்கும் போது அவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்றதும் தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பேரருளாளனை கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.
தப்பியோடிய மூத்த மகன் பேரருளாளனை, கொலை சம்பவம் நடைபெற்ற அரை மணிநேரத்திற்குள்ளாகவே நத்தபேட்டை அருகே பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று அவரிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்மிக்கல்லை தூக்கிப் போட்டு தாயை கொன்ற மகனின் செயல் வையாவூர் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: