Tamil Nadu Assembly: 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு! திமுக-பாமக இடையே காரசார விவாதம்! முதல்வர் பதில்! வெளிநடப்பு!
Tamil Nadu Assembly: பின் தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். மாநில அரசு செய்ய முடியாது, மத்திய அரசை கேளுங்கள் என்று சொல்வது என்ன நியாயம். விவாதத்தில், பேச சபாநாயகர் அனுமதி மறுக்கிறார் என பாமக குற்றச்சாட்டு

Tamil Nadu Assembly: 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு! திமுக-பாமக இடையே காரசார விவாதம்! முதல்வர் பதில்! வெளிநடப்பு!
’நீங்கள் இருக்கும் கூட்டணி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்’ என பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணிக்கு முதலமைசர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
10.5% இடஒதுக்கீடு தொடர்பாக விவாதம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சமூகத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேசினார்.
இதற்கு அமைச்சர்கள், அரசியல் ரீதியான கருத்து என அமைச்சர்கள் ரகுபதி, எஸ்.எஸ்.சிவங்கர் ஆகியோர் பதில் அளித்த நிலையிலும் விவாதம் தொடர்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.