ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்! பின்னணியில் பாஜக பெண் நிர்வாகியா? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
Armstrong murder: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டதாக சந்தேகிக்கப்படும் ரவுடி சம்போ செந்தில் உடன் வழக்கறிஞர் ஹரிஹரன் தொடர்பில் இருந்து உள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்! பின்னணியில் பாஜக பெண் நிர்வாகியா? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிரபல ரவுடி ‘சம்போ செந்தில்’ ஸ்கெட்ச் போட்டு கொடுத்து உள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் திருவேங்கடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.