Droupadi Murumu : முதல் முறையாக தமிழகம் வந்தடைந்தார் திரௌபதி முர்மு!
மதுரை விமான நிலையம் வந்தடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றனர்.
தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தார். குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பின்பு திரௌபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகம் வருகை வந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்.
அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்பமரியாதையும் வழங்கப்பட்ட உள்ளது. அவருக்கு கோவில் மீனாட்சி அம்மன் சிலை பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்குப்பின் சற்று நேரம் ஓய்வு எடுக்கும் அவர், பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானத்தில் கோவை செல்லும் அவர், ஈஷா யோகா மையம் சார்பில் நடக்கும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.
கோவையில் நாளை நடைபெறும் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து., கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவர் வருகையையொட்டி 3500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதியின் வருகையால் மதுரையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு அமைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட நடை பாதை கடைகள் அகற்றப்பட்டு, கடைக்காரர்கள் முன்பகுதியில் வைத்திருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு இருக்கிறது.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் இருக்கும் அனைத்து கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்