ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் திமுகவை வீழ்த்த முடியும்! நிலைப்பட்டை அறிவித்த பாஜக
”வரும் 7ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கலுக்கு நேரம் உள்ளதால் ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்தி வருகிறோம்”
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை தனித்தனியே சந்திதது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய சி.டி.ரவி, 1972-இல் அதிமுக தொடங்கப்பட்டபோது, திமுகவை தீய சக்தி என எம்ஜிஆர் அழைத்தார். இது 2023ஆம் ஆண்டிலும் மாறவில்லை. ஜெயலலிதா கூட திமுகவை தீயசக்தி என்று அழைத்தார். இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் அரசு தனது செல்வாக்கை நாளுக்குநாள் இழ்ந்து வருகிறது. ஒரு குடும்பத்திற்காக வேலை செய்யும் திமுக தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது. சொத்துவரி, மின்சார வரி, அத்தியவசிய பொருளான பால் விலை ஆகியவை உயர்ந்துள்ளது.
தமிழ்க்கலாச்சாரம் மீது திமுக அமைச்சர்கள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கட்டப்பஞ்சாயத்துகள், குற்றங்கள் தொடர்ந்து நடப்பதால் தமிழ் மக்கள் திமுகவிற்கு எதிராக உள்ளனர். பணபலத்தையும், அதிகார துஷ்ப்ரயோகத்தையும் ஏற்கெனவே ஈரோட்டில் பார்த்து வருகிறோம்.
திமுக என்னும் தீய சக்தியை வீழ்த்த ஒருங்கிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, ஒருகிணைந்த அதிமுக கட்டாயம் தேவை. எங்கள் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சொன்ன கருத்தை இருவரிடமும் வலியுறுத்தி உள்ளோம். ஒருங்கிணைந்த அதிமுகவால் மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்த முடியும். 7ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கலுக்கு நேரம் உள்ளதால் ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
டாபிக்ஸ்