விருதுநகரில் எந்த தவறும் நடக்கவில்லை.. இரவெல்லாம் யோசித்து விட்டு அவதூறு பரப்புவதா? செல்வப்பெருந்தகை கண்டனம்!
Selvaperunthagai : விஜயகாந்த் மீது மரியாதை வைத்துள்ளோம், எங்கள் மீதான குற்றச்சாட்டை பிரேமலதா விஜயகாந்த் பார்த்து பேசியிருக்கலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

விருதுநகரில் எந்த தவறும் நடக்கவில்லை.. இரவெல்லாம் யோசித்து விட்டு அவதூறு பரப்புவதா? செல்வப்பெருந்தகை கண்டனம்!
விருதுநகரில் எந்த தவறும் நடக்கவில்லை, இரவெல்லாம் யோசித்து விட்டு அவதூறு பரப்புவதா? தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி
சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் 25 க்கும் மேற்பட்ட இடங்களில் குறைவான வாக்கு வித்யாசத்தில் இந்தியா கூட்டணி வெற்றியை இழந்துள்ளது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு மையத்தில் 24 மணி நேரமும் சிசிடிவி வைத்து கண்காணிக்கப்பட்டுள்ளது.