சீமான் பணத்துக்கு விலை போய்விட்டார்.. கட்சியில் யாரும் வளரக் கூடாது என நினைக்கிறார்.. நா.த.க நிர்வாகிகள் குற்றச்சாட்டு!
Seeman : சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகி பிரபாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சீமான் பணத்துக்கு விலைபோய்விட்டார்.. கட்சியில் யாரும் வளரக் கூடாது என நினைக்கிறார்.. நா.த.க நிர்வாகிகள் குற்றச்சாட்டு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார் என கிருஷ்ணகிரி மண்டல நா.த.க. ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கரு.பிரபாகரன் அறிவித்துள்ளார்.
கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார்
கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார்.. 14 ஆண்டுகளாக உழைத்த எங்களுக்கு வேட்பாளராக யாரை நிறுத்தனும்னு தெரியாதா? எங்கள் இளமைக் காலமே போச்சு என சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகி பிரபாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.