AIADMK : கள்ளக்குறிச்சி விவகாரம் சட்டப்பேரவையில அமளி.. கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்
AIADMK: சட்டப்பேரவை தொடங்கியதுமே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் விவகாரம் தொடர்பாக இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் சட்டப்பேரவையில அமளி.. கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்
AIADMK: இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியதுமே கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.