Biriyani Man Arrested: ’அது ஆபாச வீடியோ!’ யூடியூபர் பிரியாணி மேனை கைது செய்தது ஏன்? சென்னை மாநகர காவல்துறை விளக்கம்!
Biriyani Man Arrested: செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைளைக்காட்டி, கொச்சை வார்தைகளுடன் youtube வீடியோ பதிவேற்றம் செய்ததாக புகார

Biriyani Man Arrested: செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகளை வீடியோவாக வெளியிட்டதாலேயே பிரியாணி மேனை கைது செய்து உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.
சமீப காலமாக யூ-டியூப்பில் ட்ரெண்டாக மாறி இருக்கும் சேனல் தான், பிரியாணி மேன். இதை நடத்தி வருபவர், அபிஷேக். இவருக்கும் இர்ஃபானுக்கும் சமீப காலமாக பெரிய பஞ்சாயத்து நடந்து வருகிறது.
இர்ஃபான் தான் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தினார், அவரை அரசியல் கட்சியினர் காப்பாற்றிவிட்டதாக பொதுவெளியில் கூறினார். அதேபோல் இர்ஃபான் சென்று ரிவ்யூ செய்யும் உணவகங்களில் தரமான உணவு வழங்கவில்லை; அவர் விளம்பரத்திற்காக பணம்பெற்றுக்கொண்டு ரிவ்யூ செய்கிறார் என அடுக்கடுக்காக அவரை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார், பிரியாணி மேன் அபிஷேக். இதைப் பார்த்து கடுப்பான இர்ஃபான் அவருக்கு பதிலடியும் கொடுத்தார்.