அரசு அலுவலகங்களில் சோதனை.. 200 ரயில்கள் ரத்து.. நாளை கரையைக் கடக்கிறது டாணா புயல்.. இன்றைய டாப் 10 செய்திகள்!
தீபாவளி எதிரொலியாக அரசு அலுவலகங்களில் சோதனை, புயல் காரணமாக 200 ரயில்கள் ரத்து, நாளை கரையைக் கடக்கிறது டாணா புயல் என இன்றைய டாப் 10 செய்திகள் குறித்து பார்க்கலாம்.

அரசு அலுவலகங்களில் சோதனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சோதனையாக தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்பட 37 அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 33.50 லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டு தோறும் பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சுற்றுசுழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு அலுவலகங்கள், தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம்.
முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம்
அதிமுக ஆட்சிக் காலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரம்
பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம்; புதிதாக நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது. மருத்துவமனைக்கு முதல்கட்டமாக ரூ.50,000 அபராதம் விதித்து மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உத்தவிட்டார்.