ரிவஞ்ச் மோடில் கேர்ள்ஸ் டீம்.. பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டலில் சம்பவம் செய்யும் சூப்பர் மாடல்.. களத்தில் இறங்கும் பாட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரிவஞ்ச் மோடில் கேர்ள்ஸ் டீம்.. பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டலில் சம்பவம் செய்யும் சூப்பர் மாடல்.. களத்தில் இறங்கும் பாட்டி!

ரிவஞ்ச் மோடில் கேர்ள்ஸ் டீம்.. பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டலில் சம்பவம் செய்யும் சூப்பர் மாடல்.. களத்தில் இறங்கும் பாட்டி!

Malavica Natarajan HT Tamil
Published Oct 23, 2024 10:17 AM IST

பிக்பாஸ் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கில் நேற்று ஆண்கள் அணியினர் பெண்களை அழவிட்ட நிலையில், இப்போது பெண்கள் அதற்கு பழிவாங்கும் முடிவில் உள்ளனர்.

ரிவஞ்ச் மோடில் கேர்ள்ஸ் டீம்.. பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டலில் சம்பவம் செய்யும் சூப்பர் மாடல்.. களத்தில் இறங்கும் பாட்டி!
ரிவஞ்ச் மோடில் கேர்ள்ஸ் டீம்.. பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டலில் சம்பவம் செய்யும் சூப்பர் மாடல்.. களத்தில் இறங்கும் பாட்டி!

ஹோட்டல் ஊழியர்களால் பரபரப்பான பிக்பாஸ் வீடு

உணவு சமைத்து தருவது, வாடிக்கையாளர்களை அழகுபடுத்துவது என நேற்று பிக்பாஸ் வீடே பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து, பிக்பாஸ் வீடு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக மாறியுள்ளது. அதில் ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இரு அணி உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் கேட்பதை பணியாளர்கள் செய்து தர வேண்டும் என பிக்பாஸ் விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.

கணவன் மனைவியான ரஞ்சித்- முத்து

ரஞ்சித் மற்றும் முத்துக் குமார் கணவன் மனைவியாக ஸ்டார் ஹோட்டலில் வந்து தங்குபவர்களாக வருகின்றனர். பெண்கள் அணியில் உள்ள பல போட்டியாளர்கள் ஹோட்டல் பணியாளர்களாக அவர்களுக்கு உதவினர்.

கடுப்பேற்றிய வாடிக்கையாளர்கள்

சத்யா, தீபக் மற்றும் அருண் உள்ளிட்டோர் ஓட்டலில் தங்குபவர்களாக வருகிறார்கள். அவர்கள் கேட்கும் அனைத்தையும் செய்யக்கூடிய கட்டாயத்தில் பெண்கள் அணி தள்ளப்பட்டனர். தீபக், விஜே விஷால் ஹோட்டலுக்கு உணவருந்த வருபவர்களாக வந்து பெண்களை வெறுப்பேத்தி வந்தனர்.

ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்தால் மிகவும் லேட்டாகத் தான் வரும் என பெண்கள் போட்டியாளர்கள் கூறியதால், அவர்களை வேண்டுமென்றே சமையல் சரியில்லை, கொடுத்த உணவை சரியாக சமைத்து தரவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அருணை பதம் பார்த்த பெண்கள் அணி

அதேசமயம் ஹோட்டல் பணியாளர்களான பெண்கள் அணியினர், வாடிக்கையாளராக வந்த ஆண்கள் அணிக்கு மெனிக்கியூர், பெடிக்கியூர் எல்லாம் செய்தனர்.

அப்போது, பெண்கள் அணியிலுள்ளவர்கள் காலை கழுவ உதவும் பொருட்களைக் கொண்டு அருணின் கையை தேய்த்ததால், அவருக்கு எரிச்சல் ஏற்பட்டது. மேலும், சமையல், உபசரிப்பு, வேலை என பலவற்றிலும் சொதப்பினரா அல்லது வேண்டுமென்றே செய்தனரா என பிக்பாஸ் பார்வையாளர்கள் கேட்டு வந்த நிலையில், இன்று இந்த டாஸ்க் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

பழிவாங்குமா பெண்கள் அணி

இதில் ஆண்கள் அணி தற்போது பணியாளர்கலாகவும், பெண்கள் அணி வாடிக்கையாளர்களாகவும் மாறி உள்ளனர். இந்நிலையில், பெண்கள் அணியினர் ஆண்கள் அணியினரை பழி வாங்குவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் போட்டியில் பெண்கள் அணியில் உள்ள ஆனந்தியும், பவித்ராவும் மாமியார் மருமகளாகவும், தர்ஷா தான் பெரிய மாடல் என நினைத்கு கொள்பவராகவும் அவரின் உதவியாளர்களாக ஜாக்குலினும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். மேலும் வயதான பாட்டியாக வரும் அன்ஷிதா சமையல் சரியில்லை எனக் கூறி வம்பிழுக்கும் நபராக நடித்துள்ளார். பெண்கள் அணியிலுள்ள ஜெஃப்ரி பார்ட்டி செய்ய வந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன்

இப்படி பெண்கள் அணி இன்று செய்ய உள்ள சம்பவம் என்ன என்பதை பார்க்க பலரும் ஆவலாக உள்ள நிலையில், அதைக் காண இன்று இரவு வரை பொறுத்திருக்க வேண்டும்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக வந்த விஜய் சேதுபதி, “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” எனப் பல புதிய விதிமுறைகளை புதிதாக அறிமுகப்படுத்தி வருகிறார். பிக்பாஸ் சீசன் தொடங்கிய நாளில் இருந்தே அதிக சுவாரசியமாகவும், விறு விறுப்பாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது 3ம் வாரத்தில் அதிரடியாக டாஸ்க் விளாயாடி வருகின்றனர் போட்டியாளர்கள்