தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Gayathri Says They Are Morphing My Photo And Threatening Me

என் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டல்..பாஜக எனக்கு துரோகம் செய்தது..காயத்ரி!

Divya Sekar HT Tamil
Feb 03, 2023 01:08 PM IST

Gayathri : சில தலைவர்கள் மோசமான செயல்களை ஊக்குவித்தார்கள் கண்டிக்கவில்லை. அந்த வகையில் தமிழக பாஜக கூட எனக்கு துரோகம் செய்தது என காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

காயத்ரி
காயத்ரி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் தமிழக புதிய பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றல் இருந்து தமிழக பாஜவில் உட்கட்சி பூசல்கள் தொடங்கின. அண்ணாமலை சீனியர்களை புறக்கணிப்பதாக செய்திகள் பரவின. இதில் காயத்ரி ரகுராமும் ஒருவர் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து நீக்கினார் அண்ணாமலை. இதனையடுத்து நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்ட அறிக்கை சர்ச்சையானது. இதனிடையே சமீபத்தில் கோவையைச் சேர்ந்த சரஸ்வதியுடன் இவர் பேசிய ஆடியோவும் லீக்காகி சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது அண்ணாமலையை விமர்சித்து நடிகை காய்த்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் 8 ஆண்டுகள் பாஜகவால் வளர்க்கப்பட்டேன். எனது அரசியல் பயணத்தில் பாஜகவும், மோடி ஜியும் முக்கிய பங்கு வகித்தனர். நான் கட்சியை விட்டு வெளியேறினாலும், எனக்கு பிடித்த தலைவர்கள் மீதான எனது மரியாதை அப்படியே உள்ளது. இப்போது நான் சுதந்திரமாக இருக்கிறேன், உண்மையையும் உரிமையையும் பேசுவேன்

என்னைப் பற்றி வார்ரூம் மூலம் தவறான செய்திகளைப் பரவி தூண்டி, என் புகைப்படத்தை மார்பிங் செய்து, பிளாக் மெயில் செய்து மிரட்டியவர்கள் மீதுதான் எனக்குக் கோபம். அத்தகைய மலிவான கதாபாத்திரங்கள் எப்போதும் என் தலைவராக இருக்க முடியாது. சில தலைவர்கள் இதுபோன்ற மோசமான செயல்களை ஊக்குவித்தார்கள் மற்றும் கண்டிக்கவில்லை. அந்த வகையில் TNBJP கூட எனக்கு துரோகம் செய்தது” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்