ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் - அண்ணா மலை மிகப்பெரிய மனிதர்!
அண்ணாமலை குறித்த விமர்சனத்திற்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்ப வில்லை. அண்ணா மலை மிகப்பெரிய மனிதர் என்னைப்போன்ற சிறிய மனிதர் அவருக்கு பதில் சொல்வது பொருத்தமாக இருக்காது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவு காரணமாக, ஜனவரி 4 ஆம் தேதி காலமானார். இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனிடையே, திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு மீண்டும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் மற்றும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனுவினை அளித்திருந்தனர். இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா.வின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,
"இன்றைக்கு திமுக கூட்டணியில் கை சின்னத்தில்போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கின்றேன். தனிப்பட்ட மனிதனின் வெற்றியாக இல்லாமல் மதசார்பற்ற வேட்பாளர் வெற்றி அடைய வேண்டும்
திருமகன் ஈவேரா விட்டு சென்ற பணிகளை தொடரவும், ஈரோட்டிற்கு நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என முனைப்பில் களம் இறங்கி இருக்கின்றோம்.
அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து என்னுடைய பணிகளை செய்ய வேண்டும் . மகன் விட்டு சென்ற பணிகளை தொடர வேண்டு்ம்
போக்குவரத்து நெரிசலை போக்கவும், சாயகழிவு நீரை அப்புறப்புத்தவது, ஐவுளித்தொழில், விவசாயித்திற்கு பாதிப்பு இல்லாமல் செய்ய வேண்டும்" எனதெரிவித்தார்.
மேலும் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பேசிய இளங்ககோவன், "அண்ணாமலைக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்
காங்கிரஸ் வேட்பாளராக என்னை அறிவிக்கும் முன்பே திமுகவினர் வேலையை ஆரம்பித்து விட்டனர்.
போட்டியாளர்களை பற்றி கவலை இல்லை. ஈரோட்டிற்கு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்பதற்காக நான் போட்டியிடுகின்றேன்.
ஜெயகுமாரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் மீதே புகார் இருக்கு. அவர் சொல்லும் குற்றச்சாட்டை எடுத்து கொள்ள தேவையில்லை. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் அதையெல்லாம் சரி பார்த்து விட்டனர்
இதையடுத்து அண்ணாமலையின் விமர்சனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அண்ணாமலை மிகப்பெரிய மனிதர். என்னை போல சிறியவர் அல்ல. என்னைப்போன்ற சிறிய மனிதர் அவருக்கு பதில் சொல்வது பொருத்தமாக இருக்காது; அவர் சொல்வதை நான் பொருட்படுத்துவதும் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்