தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kodaikanal: பேரிஜம் ஏரி அருகே யானை கூட்டம் முகாம்-சுற்றுலா பணிகளுக்கு தடை

Kodaikanal: பேரிஜம் ஏரி அருகே யானை கூட்டம் முகாம்-சுற்றுலா பணிகளுக்கு தடை

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 06, 2023 02:27 PM IST

பேரிஜம் ஏரியில் குட்டியுடன் காட்டு யானை கூட்டம் முகாமிட்டு இருந்தது .

யானை கூட்டம்
யானை கூட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது . இந்நிலையில் கொடைக்கானல் கீழ்குண்டாறு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. இந்த சூழலில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக இருக்கும் பேரிஜம் ஏரியில் குட்டியுடன் காட்டு யானை நேற்று முகாமிட்டு இருந்தது . தொடர்ந்து காட்டு யானை அப்பகுதியில் முகாமிட்டு உலா வருவதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை இன்று தற்காலிகமாக தடை விதித்துள்ளது . 

மேலும் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் . யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் இடம்பெயரும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்