மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் தண்டனையும் ரத்து செய்தது ஐகோர்ட்!
Doctor Subbiah murder case : நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் என ஒன்பது பேரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்தது சென்னை அமர்வு நீதிமன்றம்.
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு
பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது சென்னை அமர்வு நீதிமன்றம். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் என ஒன்பது பேரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.