Modi vs MK Stalin: ’இப்படியே பண்ணா தனிமைப்பட்டு போவீங்க பிரதமரே!’ மோடியை எச்சரித்த ஸ்டாலின்! விஷயம் இதுதானா?
Modi vs MK Stalin: “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

’இப்படியே பண்ணா தனிமைப்பட்டு போவீங்க பிரதமரே!’ மோடியை எச்சரித்த ஸ்டாலின்! விஷயம் இதுதானா?
அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம், தனிமைப்பட்டு போவீர்கள் என்று பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்.
மூன்றாவது முறையாக பொறுப்பேற்று உள்ள மோடி அரசின் சார்பில் முதல் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
நிர்மலா சீதாராமன் உரை
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்து, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அதை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்களை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.