Kodanadu Case: ’கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு’
”நீதிமன்ற உத்தரவுப்படி இந்த ஆய்வு நடைபெறுவதாகவும். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் ஆய்வு குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது”

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு
கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதுடன் அங்கு காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின் மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார், சந்தோஷ்சாமி ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.