Mansoor Ali Khan: ‘பிரதமர் மோடியை கைது செய்து திகார் ஜெயில்ல அடைக்கனும்’.. பரபரப்பை கிளப்பிய நடிகர் மன்சூர் அலிகான்!
Actor Mansoor Ali Khan: சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை, இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் இன்று சந்தித்து பேசினார்.

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை, இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார்.
இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தொடங்கி இருந்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சிக்கு ஆதரவளித்த நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படாததால் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு அளிக்க கோரி அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இதனிடையே, குடியாத்தம் பகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.