தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime : உல்லாசத்திற்கு இடையூறு.. கள்ளக்காதலுடன் சேர்ந்து மகனை அடித்தே கொன்ற தாய்.. ஒரு மாதத்திற்கு பின் வெளிவந்த உண்மை!

Crime : உல்லாசத்திற்கு இடையூறு.. கள்ளக்காதலுடன் சேர்ந்து மகனை அடித்தே கொன்ற தாய்.. ஒரு மாதத்திற்கு பின் வெளிவந்த உண்மை!

Divya Sekar HT Tamil
Jun 19, 2023 11:57 AM IST

மாங்காடு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகனை அடித்தே கொன்ற தாய்
மகனை அடித்தே கொன்ற தாய்

ட்ரெண்டிங் செய்திகள்

இரண்டரை வயது மகன் தாயுடன் வசித்து வந்தான். கடந்த மாதம் மகன் சர்வேஸ்வரன் தவறி கிழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்து விட்டதாக லாவண்யா அக்கம் பக்கத்தினரிடம் கூறி கதறி துடித்துள்ளார். பின்னர் அவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு சர்வேஸ் உடல் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் மகன் இறந்தது குறித்து செல்வ பிரகாசிடம் லாவண்யா எதுவும் கூறவில்லை. இதற்கிடையே செல்வ பிரகாசம் மகனை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது என கடந்த சில நாட்களுக்கு முன்பு அவனை பார்க்க ஆசையாக சென்றுள்ளார். பின்னர் மகன் எங்கே என கேட்டபோது லாவண்யா இறந்துவிட்டான் என கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வ பிரகாசம் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துபோய் நின்றார். அப்போது அங்கு இருந்த சிலர் லாவண்யாவின் நடவடிக்கை குறித்து சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து செல்வபிரகாசம் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது தான் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் லாவண்யா மகனை அடித்தே கொன்றது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுடன் சேர்ந்து குழந்தை சர்வேஸ்வரணை அடித்து கொலை செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. கணவர் பிரிந்து சென்ற பின்னர் வீட்டின் அருகே வசித்த மணிகண்டனுடன் லாவண்யாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்களின் உல்லாச சந்திப்பிற்கு இடையூறாக குழந்தை சர்வேஸ்வரன் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், குழந்தை சர்வேஸ்வரன் உடலில் கடித்து வைத்துள்ளார். மேலும் இருவரும் தொடர்நது குழந்தை சர்வஸேவரனை அடித்து உதைத்து கொடுமை படுத்தி உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் பைக்கிள் இருந்து கீழே தள்ளியதில் குழந்தை சர்வேஸ்வரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தான். இது வெளியே தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் எனக்கருதி லாவண்யா நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து லாவண்யா, அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்