Chennai: சென்னை குளத்தில் மூழ்கி 5 பேர் பரிதாப பலி
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய சிறுவர்களை உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
மடிப்பாக்கம் அருகே குளத்தில் மூழ்கி 5 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸரர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிலையில் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டினர். அப் போது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தது. மேலும் ஒருவரது உடலை தேடும் பணி நடைபெற்ற நிலையில் தற்போது அவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நங்கநல்லூர் அருகே கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்