Yuvraj six 6s anniversary:மகனுடன் ஆறு சிக்ஸர்கள் சாதனை நாளை கொண்டாடிய யுவராஜ்
ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை நிகழ்த்தி 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த விடியோவை தனது மகனை மடியில் வைத்து பார்த்து ரசித்துள்ளார் யுவராஜ் சிங். இந்த க்யூட் கொண்டாட்டத்தின் விடியோவையும் அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் என்றைக்குமே மறக்க முடியாத சம்பவத்தை செப். 19இல் நிகழ்த்தி இருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங். முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டர்பனில் நடைபெற்ற போட்டியில் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் விளாசி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இப்படியொரு சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் யுவராஜ் சிங்.
ட்ரெண்டிங் செய்திகள்
யுவராஜ் ஆறு சிகஸர்கள் விளாசுவதற்கு காரணமாக இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பிளின்டாப் சீண்டல் முக்கிய காரணமாக இருந்தது. இந்த சிக்ஸர் சம்பவமானது ஒரு மாஸ் மசாலா படத்தை பார்ப்பது போன்ற சீண்டல், அதிரடி, மாஸ் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றதாகவே அமைந்திருந்தது.
யுவராஜ் இப்படியொரு மறக்க முடியாத மேஜிக்கை நிகழ்த்தி 15 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அதன் ரீவிசிட் செய்துள்ளார். தனது வீட்டில் அமர்ந்தபடி அந்த மேட்சின் விடியோவோ தனது செல்ல மகன் ஓரியன் கீச் சிங்கை மடியில் அமர வைத்து பார்த்து ரசித்துள்ளார்.
அந்த ஆட்டத்தை பார்த்து என்ஜாய் செய்யும் விடியோ இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், " 15 ஆண்டுகள் கழித்து இந்த விடியோவை இதை விட சிறந்த பார்ட்னருடன் அமர்ந்து பார்க்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
யுவராஜ் இந்த விடியோவை பகிர்ந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இதற்கு லைக்குகளை குவித்துள்ளனர்.
டாபிக்ஸ்