Macau Open 2024: கம்பேக் தராத ஸ்ரீகாந்த்..அரையிறுதிக்கு முன்னேறிய தெரசா - காயத்ரி ஜோடி! அடுத்த போட்டி யாருடன்?
Macau Open 2024: காயத்திலிருந்து மீண்டு வந்து கம்பேக் தராத ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுடன் வெளியேறியுள்ளார். பெண்கள் இரட்டையர் பிரிவில் தெரசா - காயத்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

Macau Open 2024: கம்பேக் தராத ஸ்ரீகாந்த்..அரையிறுதிக்கு முன்னேறிய தெரசா - காயத்ரி ஜோடி! அடுத்த போட்டி யாருடன்?
மக்காவ் ஓபன் 2024 பேட்மிண்டன் போட்டிகள் சீனாவில் உள்ள மக்காவ் நகரில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றியாளர்களுக்கு மொத்த பரிசு தொகையாக 210, 000 அமரிக்கா டாலர்கள் வழங்கப்படவுள்ளது.
காலிறுதியில் வெளியேறிய ஸ்ரீகாந்த்
இந்தியா நட்சத்திர வீரரும், ஆறாவது சீட் வீரராக இருந்து வரும் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் ஹாங்காங் நாட்டை சேர்ந்த எங் கா லாங் அங்கஸ் என்பவரை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த போட்டியில் 2021 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரரான ஸ்ரீகாந்த் 16-21 12-21 என நேர் செட்களில் மோசமான தோல்வியை தழுவினார்.