Karthigai Viratham: ‘இன்று கார்த்திகை விரதம்..’ கந்தனின் அருள் பெற இந்த விரத முறை கட்டாயம்!
- இன்று கார்த்திகை விரதம். அரோகரன் உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இன்பத்தை நிரப்புவான் என்கிற நம்பிக்கையில் நாம் மாதந்தோறும் மேற்கொள்ளும் விரத முறை. ஆனால், அதிலும் சில நடைமுறைகள் இருப்பதை நீங்கள் அறிந்ததுண்டா?
- இன்று கார்த்திகை விரதம். அரோகரன் உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இன்பத்தை நிரப்புவான் என்கிற நம்பிக்கையில் நாம் மாதந்தோறும் மேற்கொள்ளும் விரத முறை. ஆனால், அதிலும் சில நடைமுறைகள் இருப்பதை நீங்கள் அறிந்ததுண்டா?
(1 / 5)
மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 12 ஆண்டுகள் தொடர்ந்து கார்த்திகை விரதம் இருந்தால் வாழ்வில் உன்னத நிலையை அடையாளம் என்கிறார்கள்.
(2 / 5)
கார்த்திகை விரதம் இருப்பவர்கள், முந்தைய நாளான பரணி நட்சத்தில் நண்பகலில் உணவு எடுத்துக் கொண்டு, இரவில் விரதம் இருந்து முருகன் வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். மறுநாளான கார்த்திகை அன்று குளித்து விரதம் இருந்து, பாராயணம், தியானம், கோயில் வழிபாடு மேற்கொள்ளலாம். பகலில் இரவில் உறங்க கூடாது.
(3 / 5)
மறுநாள் ரோகிணி அன்று காலையில் நீராடி, முருகனை வழிபட்டு விட்டு அதன் பிறகு சாப்பிட வேண்டும். இப்படி கார்த்திகைக்கு முதல் நாளில் தொடங்கி, கார்த்திகைக்கு மறுநாள் வரை விரதம் தொடரும் முறை தான் பயன் தரும் கார்த்திகை விரத முறையாகும்.
(4 / 5)
கார்த்திகை விரத நாளான்று கந்த கஷ்டி, கந்த புராணம், சண்முக புராணம், கந்தர் கலிவெண்பா போன்ற முருக பாடல்களை பாராயணம் செய்யலாம்.
மற்ற கேலரிக்கள்