நோயாளியின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் ரேடியோகிராஃபர்கள்..கதிரியக்க நாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
சுகாதார துறையில் நோயாளியின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக ரேடியோகிராஃபர்கள் இருந்து வருகிறார்கள். உலக கதிரியக்க நாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

உலக ரேடியோகிராஃபி தினம் என்பது ஒரு சர்வதேச சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரமாக பார்க்கப்படுகிறது. இது கதிரியக்க சிகிச்சை, நோயறிதல் இமேஜிங் மற்றும் ரேடியோகிராஃபர்கள் சுகாதார நிர்வாகத்தில் வகிக்கும் முக்கிய பங்கு பற்றிய பொது அறிவை அதிகரிக்க முயற்சிக்கிறது. நவீன சுகாதார சூழலில் ரேடியோகிராஃபர்கள் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் மருத்துவ இமேஜிங்கின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து ரேடியோகிராஃபியின் தொழிலைக் கொண்டாடும் விதமாக இந்த நாள் இருக்கிறது. ஆண்டுதோறும் உலக ரேடியோகிராஃபி தினம் ஆண்டுதோறும் நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ரேடியோகிராஃபி தினம் வரலாறு
உலக ரேடியோகிராஃபி தினம் நவம்பர் 8, 1895 அன்று, ஜெர்மன் இயற்பியலாளர் வில்ஹெல்ம் கான்ராட் ரோன்ட்ஜென் எக்ஸ்-கதிர்வீச்சு அல்லது எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்ததைக் கொண்டாடுகிறது. 1901இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை முதன்முதலில் பெற்றவர் ரோன்ட்ஜென்.
ஐரோப்பிய கதிரியக்க சங்கம் (ESR), வட அமெரிக்காவின் கதிரியக்க சங்கம் (RSNA) மற்றும் அமெரிக்க கதிரியக்க கல்லூரி (ACR) ஆகியவை இணைந்து முதல் உலக கதிரியக்க தினத்தை 2012 ஆம் ஆண்டு கொண்டாடின. பிப்ரவரி 10, 1923இல் வில்ஹெம் ரோன்ட்ஜென் இறந்த தினத்தை அனுசரிக்கும் வகையில், பிப்ரவரி 10, 2011 அன்று நடத்தப்பட்ட ஐரோப்பிய கதிரியக்க தினம், இந்த நிகழ்வின் முன்னோடியாக இருந்தது. இது ESR ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது.