Delhi Accident : பகீர்.. வாந்தி எடுக்க பேருந்து ஜன்னலில் தலையை நீட்டிய பெண்.. தலை நசுங்கி பலியான சோகம்!
டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் பேருந்து ஜன்னல் வழியாக வாந்தி எடுக்க முயன்றபோது இரு வாகனங்களுக்கு இடையே சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார்.
டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் பேருந்து ஜன்னல் வழியாக வாந்தி எடுக்க முயன்றுள்ளார். இதற்காக அவர் தனது தலையை வெளியே நீட்டியுள்ளார். அப்போது இரு வாகனங்களுக்கு இடையே அவரது தலை சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாப்லி. இவர் அங்கே காஷ்மீர் கேட்டில் இருந்து லூதியானா செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அப்பெண் அவரது சகோதரி, சகோதரி கணவர் மற்றும் அவர்களின் 3 குழந்தைகளுடன் பேருந்தில் பயணித்துள்ளார்.
பொதுவாக ஒரு சிலருக்கு பேருந்துகளில் பயணிக்கும் போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அதேபோல தான் பாப்லிக்கு திடீரெனவாந்தி வரும் உணர்வு ஏற்பட்டுள்ளது. ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அவர் வாந்தி எடுக்க ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டியுள்ளார்.
அப்போது இவர் வந்த பேருந்தை முந்தி செல்ல வந்த மற்றொரு பேருந்து குறுகலான பாதையில் வேகமாக பேருந்தை இயக்கியுள்ளார். இதில் வாந்தி எடுக்க ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டிய அந்த இளம்பெண்ணின் தலை பின்னால் வந்த வாகனத்தில் மீது கொடூரமாக மோதியது. இதில் இரண்டு வாகனங்களுக்கும் இடையே இவரது தலை சிக்கி நசுங்கியது. இதில் அப்பெண் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்பெண் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்ததை கண்டு குடும்பத்தினர் கதறி துடித்தனர். இளம்பெண் மீது மோதிய வாகனம் நிற்காமல் அங்கிருந்து சென்ற நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.