Wangari Maathai : பூமிக்கு பசுமைப்போர்வை போர்த்திய வன தேவதை வங்காரி மாத்தாய் பிறந்த தினம் இன்று!
Wangari Maathai : இவர் நடத்திய பசுமை பட்டை இயக்கம், அது ஏற்படுத்திய மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அவர் செய்த நன்மை என்ன என்று பார்க்கலாம்.

Wangari Maathai : பூமிக்கு பசுமைப்போர்வை போர்த்திய வன தேவதை வங்காரி மாத்தாய் பிறந்த தினம் இன்று!
மகளிர் மாதம் மற்றும் வன தினம் ஆகியவற்றை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் நாம் வனத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுற்றுச்சூழல் பெண்ணிய போராளி வங்காரி மாத்தாய் குறித்து தெரிந்துகொள்ளலாம். இன்று அவரது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின்றி வேறு எவராலும் இந்த பூமியை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த இந்த வனப்பேச்சியின் கதையை அவரது பிறந்த நாளில் தெரிந்துகொள்ளலாம்.
இவர் நடத்திய பசுமை பட்டை இயக்கம், அது ஏற்படுத்திய மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அவர் செய்த நன்மை என்ன என்று பார்க்கலாம்.
ஆப்ரிக்காவின் கென்யா நாட்டில் உள்ள நியேரியில் 1940ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பிறந்தவர் வாங்காரி முட்டா மாத்தாய். வனங்களின் தாய். மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலே முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்.