BADLAPUR CASE: குற்றங்கள் அதிகரிக்கும்போது ராக்கி கட்டுவதில் ஆர்வமாக உள்ள மகாராஷ்டிர முதலமைச்சர் - உத்தவ் தாக்கரே தாக்கு
BADLAPUR CASE: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்போது ராக்கி கட்டுவதில் ஆர்வமாக உள்ள மகாராஷ்டிர முதலமைச்சர் என உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்துள்ளார்.

BADLAPUR CASE: மழைக்கு மத்தியில், நெற்றி மற்றும் கைகளில் கருப்பு பட்டைகளை அணிந்து, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி-எஸ்பி), உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாதியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று(ஆகஸ்ட் 24) மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில், பத்லாபூர் பாலியல் வன்கொடுமை வழக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதலமைச்சரும் சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரே தாதரில், உள்ள சிவசேனா பவனுக்கு வெளியே நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசைத் தாக்கிப் பேசிய உத்தவ் தாக்குரே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆளும் அரசு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டினார்.
"நாங்கள் பந்த் ஏற்பாடு செய்துள்ளோம்.சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்புக்காக நாங்கள் பந்துக்கு அழைப்பு விடுத்தோம். மகாராஷ்டிராவில் பந்த் போராட்டம் நடத்துவது ஏன்?’’ என்று உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.