HBD Kumari Ananthan: பெருந்தலைவர் காமராஜர் விருது.. தமிழில் பேசும் உரிமை பெற்ற நாயகன் குமரி அனந்தன்
Kumari Ananthan: 1991ல் சாத்தான் குள தொகுதியில் மீண்டும் தேர்வானார். தன் வாழ்நாளில் 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார். 1996ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் குமரி அனந்தன்.

இவர் 1933 மார்ச் 19ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் திருவிதாங்கூர் பகுதியில் இருந்த குமரி மங்கலம் என்ற அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தார். இந்த ஊர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இவர் விடுதலை போராட்ட வீரரான ஹரிகிருஷ்ண பெருமாள் மற்றும் தங்கம்மை தம்பதியின் மகனாக பிறந்தார்.
இவரது தம்பி வசந்த குமார். இவரது மனைவியின் பெயர் கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன் 4 மகள்கள். இவரது மகளான தமிழிசை தற்போது தெலுங்கானாவின் ஆளுநராக இருந்தார்.
இவர் தமிழில் ஆழ்ந்த புலமை பெற்றவர். எம்.ஏ தமிழ் படித்தவர். இவர் டாக்டர் பட்டமும்பெற்றுள்ளார். சில காலம் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். பின் காங்கிரஸில் இணைந்தார் பெருந்தலைவர் காமராஜரின் பாதையில் செயல்பட்டார். காந்திய பாதையில் தன் வாழ்க்கையை அமைத்து கொண்டார். ஏற்கனவே காமராஜர் வெற்றி பெற்றிருந்த
