தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala Crime: கள்ளக்காதலால் விபரீதம்: திருமணத்துக்கு வலியுறுத்திய காதலியை லாட்ஜில் ரூம் போட்டு கொலை செய்த கொடூரம்!

Kerala Crime: கள்ளக்காதலால் விபரீதம்: திருமணத்துக்கு வலியுறுத்திய காதலியை லாட்ஜில் ரூம் போட்டு கொலை செய்த கொடூரம்!

Pandeeswari Gurusamy HT Tamil
May 18, 2023 11:01 AM IST

Kerala Murder: தேவிகாவை கொலை செய்தபின்னர் சதீஷ் லாட்ஜ் அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு ஹோஸ்துர்க் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார்.

கொலை செய்த சதீஷ்
கொலை செய்த சதீஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

கேரளாவில் திருமணத்துக்கு வலியுறுத்திய காதலியை லாட்ஜில் ரூம் போட்டு கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் காதலனுக்கு ஏற்கனவே மணமாகி இருந்த நிலையில் திருமணம் மீறய காதலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள போவிக்கானம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு வயது 36. சதீஷ்க்கு திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சதீஷ்க்கும், காசர்கோடு அருகே உள்ள ஊதுமாபாறை பகுதியைச் சேர்ந்த 34 வயதான தேவிகா என்பவருக்கும் சில ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்துவந்துள்ளது. தேவிகா அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கும் வேறொருவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில்தான் சதீஷும், தேவிகாவும் அவ்வப்போது தனியாக சந்தித்து நெருக்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் தேவிகாவுடனான தொடர்பு சதீஷின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனால் சதீக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

ஆனால் தேவிகா அவ்வப்போது சதீஷை தனிமையில் சந்திக்க விரும்பியதாக கூறப்படுகிறது. மேலும் சதீஷை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி வந்துள்ளார் தேவிகா. திருமணம் மீறிய தொடர்பு ஏற்கனவே குடும்பத்தில் பூதாகரமான பிரச்சனைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் , திருமணம் செய்ய வலியுறுத்தி நெருக்கடி கொடுத்த தேவிகாவால் சதீஷ் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் காஞ்சாங்காடு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தனிமையில் சந்திக்கலாம் என தேவிகாவை அழைத்துள்ளார் சதீஷ். சதீஷ் உடன் நெருக்கமாக இருக்கலாம் என்ற ஆசையில் தேவிகாவும வந்துள்ளார். ஆனால் லாட்ஜ் அறையில் சதீஷ் மற்றும் தேவிகாவிடம் தன்னைவிட்டு பிரிந்து செல்லும்படி கூறியுள்ளார். ஆனால், மனைவியை விவகாரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்துகொள் என தேவிகா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சதீஷ் தான்மறைத்து வைத்திருந்த அரிவாளால் தேவிகாவின் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார்.

தேவிகாவை கொலை செய்தபின்னர் சதீஷ் லாட்ஜ் அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு ஹோஸ்துர்க் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தேவிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்