Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்!
நடுத்தர வர்க்கம் எப்போதும் பிரதமர் சொல்வது கேட்டு வருகின்றது, கோவிட் காலத்தில் பிரதமர் கோரிக்கைக்கு இணங்க, கைதட்டி விளக்குகளை ஏற்றினர். ஆனால் அந்த வர்க்கம் இந்த அரசால் ஏமாற்றமடைந்து உள்ளது என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். மகாபாரத காலத்தில் வகுக்கப்பட்ட சக்ரவியூகத்தை போல் தற்போது மோடி, அமித்ஷா, மோகன் பகவன் உள்ளிட்ட 6 பேர் பத்ம வியூகத்தை வகுத்து உள்ளதாகவும், அது தற்போது உடைத்தெரியப்பட்டு வருவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
பட்ஜெட்டில் ஏகபோக மூலதனம்
ஏகபோக மூலதனம், அரசியல் ஏகபோகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மகாபாரதத்தில் சக்ர வியூகத்தில் அபிமன்யூ கொலை செய்யப்பட்டார். அதே போல் "21 ஆம் நூற்றாண்டில், மற்றொரு 'சக்ரவியூகம்' தயாரிக்கப்பட்டுள்ளது, அது தாமரை வடிவத்தில் உள்ளது. அப்போது அபிமன்யூக்கு என்ன நடந்ததோ அது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நடைபெற்று உள்ளது.