PM Modi In Kanyakumari: 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் மோடி! திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்!
PM Modi In Kanyakumari: தனது 45 மணி நேர தியானம் நிறைவு பெற்ற நிலையில், அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் கடந்த மூன்று நாட்களாக இருந்து வந்த தியானத்தை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்து உள்ளார். தனது 45 மணி நேர தியானம் நிறைவு பெற்ற நிலையில், அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
2024 மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு, எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று தனது மூன்றாவது நாள் தியானத்தை நிறைவு செய்தார். கடந்த மே மாதம் 30ஆம் தேதி அன்று தனது தியானத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.
’சூரிய அர்க்யா’ செய்த பிரதமர் மோடி:
19 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி சுவாமி விவேகானந்தர் 1893 இல் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் இந்தியாவின் ஆன்மீகப் புகழை உலகிற்கு எடுத்துச் சென்றார். கன்னியாகுமரியில் 1970 ஆம் ஆண்டு துறவியின் நினைவாக இந்த நினைவிடம் கட்டப்பட்டது. அங்கு பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டார்.