Lalit Khaitan: சாராய தொழிற்சாலை நடத்தி 80 வயதில் பெரிய கோடீஸ்வரரான லலித் கைடன் - யார் இவர்?
ராம்பூர் விஸ்கி, 8PM விஸ்கி, மேஜிக் மொமென்ட்ஸ் வோட்கா, கான்டெசா ரம் மற்றும் ஓல்ட் அட்மிரல் பிராண்டி ஆகிய தயாரிப்புகளை உள்ளடக்கிய லலித் கைடன் இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனராக உயர்ந்துள்ளார்.
டெல்லியை தளமாகக் கொண்ட ரேடிகோ கைடன் நிறுவனத்தின் 80 வயது தலைவர் லலித் கைடன். மதுபான சந்தையில் தனது நிறுவனமான ரேடிகோ கைடனின் விரைவான வளர்ச்சியைப் பயன்படுத்தி இந்தியாவின் சமீபத்திய கோடீஸ்வரராக மாறியுள்ளார். 380 மில்லியன் டாலர் வருவாயுடன், டெல்லியில் இயங்கும் சாராய தொழிற்சாலை அவரது வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த ஆண்டு பொது வர்த்தகம் செய்யப்பட்ட நிறுவனத்தின் பங்குகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன. அதிகரித்த விற்பனை மற்றும் ‘’ஹேப்பினஸ் இன் எ பாட்டில் ஜின்’’ போன்ற புதிய மதுபானங்களின் அறிமுகம் ஆகியவற்றால் இந்த வருவாய் பெருகியுள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. இந்த உயர்வு கைடனை மூன்று இலக்க மில்லியன் டாலரை நோக்கி தள்ளியது. அவரது நிகர மதிப்பு $1 பில்லியன் என மதிப்பிடப்பட்டது.
ராம்பூர் விஸ்கி, 8PM விஸ்கி, மேஜிக் மொமெண்ட்ஸ் வோட்கா, கான்டெசா ரம் மற்றும் பழைய அட்மிரல் பிராந்தி ஆகியவற்றை உள்ளடக்கிய பிராண்ட் போர்ட்ஃபோலியோவை வைத்துள்ள ரேடிகோ கைடன் (Radico Khaitan) கொண்டுள்ளது.
இது 1943-ல் ராம்பூரில் சாராய தொழிற்சாலையாக அதன் செயல்பாட்டைத் தொடங்கியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானத்தின் (IMFL) மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் இந்த நிறுவனமும் ஒன்றாகும்.
1970களில் லலித்தின் மறைந்த தந்தை ஜிஎன் கைடன், ராம்பூர் சாராய தொழிற்சாலை நிறுவனத்தை வாங்கினார். 1995-ல், லலித் கைடன், அதை மரபுரிமையாகப் பெற்று அதை ரேடிகோ கைடன் என்னும் நிறுவனமாகப் பெயர் மாற்றினார். நிறுவனம் தற்போது அபிஷேக் கைடன் மற்றும் அவரது மகன் மற்றும் அவரது பொறியாளர்கள் குழுக்களால் மேற்பார்வையிடப்படுகிறது.
1997ஆம் ஆண்டில், ரேடிகோ கைடன் லிமிடெட்டில் சந்தைப்படுத்தல் பிரிவை வழிநடத்தி தனது வாழ்க்கையைத் தொடங்கினார், லலித் கைடன். அவரது அறிமுக பிராண்டான 8PM விஸ்கி குறிப்பிடத்தக்க வெற்றியை சந்தையில் பெற்றது. அதன் முதல் வருடத்தில் ஒரு மில்லியன் கேஸ்களை விற்பனை செய்து லிம்கா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தார்.
லலித் கைடன் யார் | அவர் பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய ஐந்துவிஷயங்கள்:
1. கொல்கத்தாவில் பிறந்த லலித் கைடன், மாயோ கல்லூரி மற்றும் செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்தவர். ரேடிகோ கைடன் லிமிடெட் நிறுவனத்தை மரபுரிமையாகப் பெற்றார்.
2. அவர் ரேடிகோவை ஒரு பாட்டிலில் இருந்து இந்தியாவின் முன்னணி (IMFL - Indian-made foreign liquor)மதுபானமாக வெற்றிகரமாக மாற்றினார்.
3. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக, நிறுவனத்திற்குத் தேவையானவற்றை வழங்குகிறார். தரமான தரநிலைகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்.
4. அவரது தலைமையின் கீழ், ரேடிகோ கைடன் நிறுவனம் குறிப்பிடத்தக்க வருவாய் வளர்ச்சியையும் சந்தைப் பங்குகளையும் அதிகரித்துள்ளது.
5. டிசம்பர் 2017-ல் உத்தரப்பிரதேச மாநில மதுதொழிற்சாலை அசோசியேஷன் வழங்கும் மதிப்புமிக்க 'வாழ்நாள் சாதனையாளர் விருது' உட்பட பல தொழில்முறை விருதுகளுடன் டாக்டர் கைடனின் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்பட்டன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்