காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற தொழிலாளி.. கடைசியில் திக் திக் .. உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்!
கட்சிரோலியில் உள்ள அபாபூர் காட்டுக்குச் சென்று காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற மூன்று தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் ஸ்ரீகாந்த் சாத்ரே என்ற தொழிலாளி வியாழக்கிழமை காலை தனது நண்பர்களுடன் யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது காட்டு யானை மிதித்து உயிரிழந்தார்.
ஸ்ரீகாந்த், ராமச்சந்திரா, சாத்ரே சில கேபிள் இடும் வேலைகளுக்காக நவேகானிலிருந்து இரண்டு நண்பர்களுடன் கட்சிரோலிக்கு வந்திருந்தார். வேலைக்கு இடையில், மூவரும் முத்தூர் வனப்பகுதியின் அபாபூர் காட்டில் யானைகளைப் பார்க்க செல்ல முடிவு செய்தனர்.
தொழிலாளி காட்டு யானை மிதித்து பலி
23 வயதான சத்ரே தூரத்தில் இருந்த ஒரு காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முடிவு செய்தார், அப்போது அது அவர் மீது பாய்ந்து அவரை மிதித்தது. அவரது நண்பர்கள் எப்படியோ தப்பித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். அவரது மரணத்திற்கு மாநில அரசால் இழப்பீடு வழங்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.