World Elephant Day 2024 : நிலத்தின் பேருயிர் காக்கப்படுவதன் அவசியம் என்ன தெரியுமா? உலக யானைகள் தின கருப்பொருள்!
World Elephant Day 2024 : நிலத்தின் பேருயிர் காக்கப்படுவதன் அவசியம் என்ன தெரியுமா? உலக யானைகள் தினத்தின் கருப்பொருள், யானைகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.

உலக யானைகள் தினம் உலகம் முழுவதிலும் ஆகஸ்ட் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நிலத்தில் உள்ள பேருயிரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அவற்றை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறுவது இந்த நாளின் நோக்கம் ஆகும்.
யானைகளின் வாழிடம் குறைவு, அதன் தங்களுக்கு உள்ள கள்ளச்சந்தை, மனித – யானை மோதல், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், இந்த பேருயிரை இந்த நிலத்தில் தக்கவைப்பதன் முக்கியத்துவம் என இந்த நாளில் பல்வேறு பிரச்னைகளை அலசுவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும். யானைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் நலன் ஆகியவை குறித்த முன்னெடுப்புகள் இந்த நாளில் செய்யப்படுகிறது.
கருப்பொருள் 2024
உலக யானைகள் தினத்தின் இந்தாண்டு கருப்பொருள் ‘வரலாற்றுக்கு முந்தைய அழகு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம், இறையியல் தொடர்பு என்பதை உருவகப்படுத்துவது இந்த நாளின் நோக்கம் ஆகும்.