Arvind Kejriwal: நாளை சிறையில் சரண் அடைவாரா கெஜ்ரிவால்? ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 5க்கு ஒத்திவைப்பு!
Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் எடை ஒரு கிலோ அதிகரித்து உள்ளதாகவும், ஜாமீன் காலத்தில் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு பதிலாக, அவர் நாடு முழுவதும் பயணம் செய்தார் என்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் சார்பில் வாதிடப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறி உள்ளது

Arvind Kejriwal: நாளை சிறையில் சரண் அடைகிறார் கெஜ்ரிவால்! ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 5க்கு ஒத்திவைப்பு! (ANI)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்கோரிய மனுவின் விசாரணையை வரும் ஜூன் 5ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ள நிலையில், நாளைய தினம் கெஜ்ரிவால் சிறை செல்வது உறுதி ஆகி உள்ளது.
இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரி மனு
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் உள்ளார்.
வரும் இன்றுடன் அவரது ஜாமீன் முடிவடையும் நிலையில் நாளை மீண்டும் சிறைக்கு சென்று சரண் அடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரியிருந்தார்.