Bengaluru Crime: தாயை கொன்று சூட்கேஸில் அடைத்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்த மகள் - பதறிய போலீஸ்!
பெற்ற தாயையே மகள் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் இளம் பெண் ஒருவர் தனது தாயை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து காவல்நிலையத்துக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயுடன் வசித்து வந்தவர் செனாலி சென். 39 வயதான இவர் 70 வயதான தாயார் பீவா பாலுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த முறை சண்டையின் போது அவரது தாயார் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரத்தில் செனாலி தனது தாயாருக்கு 20 தூக்க மாத்திரைகளை ஊட்டிவிட்டுள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு, அவரது தாய் வயிற்று வலியால் அலறித் துடித்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த செனாலி தனது தாயின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், அவரது தாயார் துடிதுடித்து இறந்துள்ளார்.
பிறகு தாயாரின் சடலத்தை பெரிய சூட்கேசில் அடைத்து லேஅவுட் காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு போலீசார் சூட்கேசை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தனது தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து செனாலி மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செனாலியிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்வுக்கு பின்னரே எப்படி கொலை நடந்தது என்பது தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
வயதான தாயாரை மகளே கழுத்தை நெறித்து கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து காவல்நிலையத்துக்கே கொண்டு வந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்