Crime : கொடூரம்.. மனைவி, மகளைக் பெட்ரோல் ஊற்றி எரித்த ராணுவ வீரர்.. தூங்கி கொண்டு இருந்தவர்களை கொன்று வெறிச்செயல்!
ஜோத்பூரில் தனது மனைவி, மகளைக் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு நாடகமாடிய ராணுவவீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிமைச் சேர்ந்த ராணுவவீரர் ராம்பிரசாத் சர்மா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நேபாளத்தைச் சேர்ந்த ருக்மீனாவை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ராணுவத்தில் ராம்பிரசாத் சர்மா பணியாற்றி வந்தார். ராம்பிரசாத்- ருக்மீனா தம்பதிக்கு ரித்திமா(2) என்ற மகள் இருந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில், வீட்டின் படுக்கை அறையில் ருக்மீனா, ரித்திமா எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர். குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து தனது மனைவி, மகள் இறந்து விட்டதாக ராம்பிரசாத் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு நேற்று அனுப்பி வைத்தனர். அப்போது தாய், மகள் இருவரும் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து ராணுவவீரர் ராம்பிரசாத்தைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவன, மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் தனது மனைவி, மகளை கொலை செய்ய முடிவு செய்தார். அதிகாலை 4 மணியளவில் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
அதன் பின் தனது 2 வயது மகளையும் கழுத்தை நெரித்து ராம்பிரசாத் கொலை செய்துள்ளார். இதன் பின் பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றி தீவைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ராம் பிரசாத் மீது ஐபிசி பிரிவு 302-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மனைவி, மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜோத்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.