இனி புரோட்டீன் தேவைக்கு கடற்பாசியே போதும்! ஆய்வாளர்களின் புதிய முயற்சி!
கடற்பாசியிலிருந்து புரதத்தைப் பிரித்தெடுப்பதற்கான வழிமுறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மேலும் இது நிலையான சைவ புரதத்தின் எதிர்கால மூலமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

விஞ்ஞானிகள் கடற்பாசியில் இருக்கும் மறைக்கப்பட்ட ஊட்டச்சத்து புதையலைத் கண்டறிந்துள்ளனர். மேலும் கடற்பாசியிலிருந்து எடுக்கப்படும் புரதங்கள் ஒரு முக்கியமான உணவுக் கூறாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக உணவு வேதியியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஸ்வீடனில் உள்ள சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த புரதங்களை முன்பை விட மூன்று மடங்கு திறமையாக பிரித்தெடுக்க ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.
கடல் கீரை பற்றி மேலும்
கடல் கீரை, ஒரு வகை கடற்பாசி ஆகும். இது ஒரு நிலையான புரத மூலமாகும். மேலும் ஆராய்ச்சியாளர்கள் கடற்பாசியில் இருந்து புரதத்தை பிரித்தெடுக்கும் திறனை மூன்று மடங்காக அதிகரித்து, புதுமையான உணவு பயன்பாடுகளுக்கு வழி வகுத்துள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடல் கீரையில் காணப்படும் புரதம் இறைச்சி மற்றும் தற்போதுள்ள மாற்று புரத மூலங்கள் இரண்டிற்கும் மாற்றாக ஒரு நம்பிக்கைக்குரிய கூடுதலான புரதத்தை வழங்குகிறது. கூடுதலாக, கடற்பாசியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதனை நீர்ப்பாசனம், உரமிடுதல் அல்லது பூச்சிக்கொல்லி பயன்பாடு இல்லாமல் பயிரிடலாம்.
கடல் கீரை என்பது ஒரு வகை மேக்ரோஅல்கா ஆகும், இது பொதுவாக கடற்பாசி என்று அழைக்கப்படுகிறது, இது நிலையான நீர் நிலைகளிலும், பாறைகளின் மீதும் வளர்கிறது. நீர்ப்பரப்பின் மேற்பரப்பில் கடற்பாசிகள் மிதக்கிறது. பார்ப்பதற்கு இந்த கடற் பாசிகள் சாதாரண கீரை இலைகளை போலவே இருக்கும். "இதில் அதிக அளவு உப்பு இல்லாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட உப்பு சுவை கொண்ட உமாமி போல இதன் சுவை இருக்கும்.