Home Decors Idea : வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் துளசிச் செடியை எந்த இடத்தில் நட்டு வைத்தால் செல்வம் செழிக்கும்?
Home Decors Idea : வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் துளசிச் செடியை எந்த இடத்தில் நட்டு வைத்தால் செல்வம் செழிக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் துளசியை வைக்க ஏற்ற இடம் எதுவென்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். துளசிச்செடியை வைக்க ஏற்ற இடத்த தெரிந்துகொண்டு அந்த இடத்தில் அதை நடவு செய்து வாழ்வில் மகிழ்ச்சி பெறுங்கள். ஒரு வீட்டில் கட்டாயம் 14 துளசிச் செடிகள் இருக்கவேண்டும் என்று ஆய்வு கூறுகிறது. அப்போது அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு செடியாவது வைத்திருங்கள். அந்தச்செடியையும் நீங்கள் எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்று தெரிந்துகொண்டால், உங்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் துளசி ஒரு மூலிகைச் செடி மட்டுமல்ல, அது ஒரு புனிததான செடியும் ஆகும். இது லட்சுமி தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறது. இந்தச் செடியை உங்கள் வீட்டில் வைத்தால் அது உங்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்களைப் பரப்பி, லட்சுமி தேவியை உங்கள் வீட்டு வரவழைத்து உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கச் செய்வதாக இந்து மதம் கூறுகிறது. உங்கள் வீட்டில் துளசி செடியை வைத்திருந்து நல்ல நேர்மறை எண்ணங்களை உங்கள் வீட்டுக்கு அழையுங்கள். உங்கள் வீட்டில் ஆரோக்கியமும் உண்டாகும்.
வாஸ்துப்படி துளசிச் செடியின் முக்கியத்துவம்
வாஸ்து சாஸ்திரத்தில் துளசி ஒரு சக்திவாய்ந்த செடியாகக் கருதப்படுகிறது. இந்தச்செடி வீட்டில் உள்ள ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் ஏற்பட உதவுகிறது. இதனால் உங்கள் வீட்டில் அமைதி, தூய்மை நிறையச் செய்கிறது. உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
உங்கள் வீட்டில் துளசிச் செடிகள் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்
உங்கள் வீட்டில் துளசிச் செடிகள் வைப்பதால், எண்ணற்ற மருத்துவ பலன்கள் உண்டு. அதன் மூலம் வீட்டுக்கு நேர்மறை எண்ணங்கள் வரும். மேலும் பல நன்மைகளும் உள்ளது. இதன் மணம் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த இலைகளை சாப்பிடுவதால் சளி, இருமல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதில்லை.