Garden : உங்கள் தோட்டத்தில் இந்த களைச் செடிகளைக் கண்டால் உடனே பிடுங்கி எறிந்துவிடுங்கள்!
Garden : உங்கள் தோட்டத்தில் இந்த களைச் செடிகளைக் கண்டால் உடனே பிடுங்கி எறிந்துவிடுங்கள். இல்லாவிட்டால் தோட்டத்தையே அழித்துவிடும்.

உங்கள் தோட்டத்தை குலைக்கும் களைச்செடிகள் என்னவென்று தெரிந்துகொள்ளங்கள். உங்கள் வீட்டில் அழகான தோட்டம் அமைக்க விரும்புகிறீர்கள் என்றால், அதில் அழகான மலர்கள் பூத்துக்குலுங்கவேண்டும். காய்கள் காய்த்து தொங்கவேண்டும் என்றுதான் எதிர்பார்ப்போம். ஆனால் அதை இந்த களைச் செடிகள் கலைத்துவிடும். களைகள் என்பது தேவையற்ற செடிகள், நமது தோட்டத்தில் தானாகவே முளைத்து, நாம் வளர்க்க விரும்பும் தாவரத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. உங்கள் தோட்டத்தை பாதிக்கும் எண்ணற்ற களைச்செடிகளை தெரிந்துகொண்டு அவற்றை உடனே உங்கள் தோட்டத்தில் இருந்து நீக்கிவிடுங்கள். இல்லாவிட்டால் அவை உங்கள் தோட்டத்தையே சிதைத்துவிடும். உங்கள் வீட்டு தோட்டத்தை குலைக்கும் செடிகள் குறித்து இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
பார்த்தீனியம்
பார்த்தீனியம் அல்லது காங்கிரஸ் புல் என்று அழைக்கப்படும் இந்த களைச் செடி, இந்தியாவில் வளரும் மிக முக்கியமான களைச் செடியாகும். இந்தச் செடியில் சிறிய, வெண்ணிற, நட்சத்திர வடிவிலான பூக்கள் பூக்கும். இது தோட்டத்தில் ஒன்று வந்தால் கடகடவென அதிகம் வளர்ந்துவிடும். உங்கள் தோட்டத்தில் மற்ற செடிகளின் வளர்ச்சியை இது பாதிக்கும். இது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சுவாசக்கோளாறுகளையும் கொண்டுவரும்.
பருப்புக்கீரை அல்லது தரைக்கீரை
இதுவும் இந்தியாவில் காணப்படும் பொதுவான களைச்செடிகளுள் ஒன்றாகும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவிலும், பூக்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இது பார்க்க மிகவும் அழகாக இருக்கும். இது உங்கள் தோட்டத்தில் இருந்தால் உங்கள் தோட்டத்தை ஒரு நொடியில் சிதைத்துவிடும். எனவே பார்த்தவுடனே இதை வேரில் இருந்து நீங்கள் பிடுங்கி எறிந்துவிடவேண்டும். அப்போதுதான் தோட்டத்தில் உள்ள மற்ற செடிகள் பாதுகாக்கப்படும்.