Children Immune Booster: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அந்த 5 பொருட்கள் என்ன தெரியுமா?
Children Immune Booster: பழங்காலத்தில் இருந்தே சுக்கு,மிளகு, திப்பிலி, அஸ்வகந்தா, அதிமதுரம் ஆகிய ஐந்து பொருட்கள் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொருட்கள் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இயல்பாகவே குழந்தைகளுக்கு எளிதாக பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருப்பதை இதற்கு முக்கிய காரணமாகும். மழை, வெயில் காலங்களில் பரவக்கூடிய பல நோய்கள் குழந்தைகளை அதிக அளவில் பாதிப்படைய செய்கிறது. இத்தகைய நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று மூலிகை வைத்தியம். பழங்காலத்தில் இருந்தே சுக்கு,மிளகு, திப்பிலி, அஸ்வகந்தா, அதிமதுரம் ஆகிய ஐந்து பொருட்கள் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு நோய்களுக்கு மருந்து
சுக்கு,மிளகு, திப்பிலி, அஸ்வகந்தா, அதிமதுரம் ஆகிய ஐந்தையும் தொடர்ந்து சாப்பிடும் போது நுரையீரல் தொற்று முதல் ஜீரண மண்டல இயக்கம் வரை பல விதான நோய்களுக்கு தீர்வாக இவை உள்ளன. காய்ந்த இஞ்சியே சுக்கு என பயன்படுத்தப்படுகிறது. சுக்கு நுரையீரல் தொடர்பான இருமல், சளி மற்றும் வயிறு தொடர்பான தொல்லைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பிரசவ காலங்களில் குமட்டலை குறைக்கவும், மாதவிடாய் காலங்களில் வலியை குறைக்கவும் பயன்படுகிறது.