Exclusive : மழைக்காலத்தில் காய்ச்சல் வராமல் தடுத்துக்கொள்ளும் வழிகள் – சித்த மருத்துவர் விளக்கம்!
மழைக்காலத்தில் காய்ச்சல் தொற்றுகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்று சித்த மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.

தீபாவளி முடிந்து மழையும், பனியுமான ஒரு குளிர் காலம் நிலவத்துவங்கிவிட்டது. இப்போது தொற்று கிருமிகளுக்கு கொண்டாட்டமான காலம் எனலாம். எளிதாக தொற்றும் வாய்ப்பு காற்றில் உள்ளது. நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலமிது என்று திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் மக்களை எச்சரிக்கிறார். மழைக்காலத்தில் பரவும் காய்ச்சல்கள் மற்றும் அதை தீர்க்கும் சித்த மருத்துவ தீர்வுகள் குறித்து மருத்துவர் ஒரு தொடராக இங்கு விளக்குகிறார். மழைநீர் தேங்கி நிற்பதால் அதில் டெங்கு கொசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவுகிறது. சுத்தமில்லாத தண்ணீரின் வழியே, டைஃபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, சிறுநீரக தொற்று, உணவு ஒவ்வாமையால் வாந்தி, பேதி, காய்ச்சல் போன்றவை ஏற்பட வழிவகுக்கும்.
மழைக்காலத்தில் காய்ச்சல் வரக் காரணம்
சுகாதாரமற்ற குடிநீர் பருகுவது மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உண்பதால் ஏற்படலாம்.
காற்றின் மூலம் பரவும் வைரஸ் நுண்கிருமிகளின் தொற்றுக்கு காரணமாகின்றன.