இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?..ஒருவர் எத்தனை முறை இரத்த தானம் செய்யலாம்? - முழு விபரம் இதோ!
இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

மனித உடலில் இரத்தம் மிகவும் முக்கியமானது. உடலில் ரத்தம் இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். இரத்தத்தின் மூலம் மட்டுமே ஆக்ஸிஜன் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சீராக சென்றடையும்.
விபத்துகள் அல்லது சில அறுவை சிகிச்சை முறைகளின் போது, மற்றவர்களுக்கு இரத்தம் தானமாக தேவைப்படுகிறது. இரத்தத்தை செயற்கையாக உருவாக்க முடியாது, எனவே அதை மனிதரிடமிருந்து தான் சேகரிக்க வேண்டும். அதனால்தான் இரத்த தானம் என்பது உயிர் தானத்திற்கு சமம். இந்த தன்னலமற்ற செயல் நிறைவையும் நேர்மறை உணர்வையும் உருவாக்குகிறது. நீங்கள் தானம் செய்யும் இரத்தம் மற்றவரின் ஆயுளை நீட்டிக்கும்.
எத்தனை முறை இரத்த தானம் செய்யலாம்?
வருடத்திற்கு இரண்டு முறை இரத்த தானம் செய்வதால் எந்த ஒரு உடல்நல பிரச்சனையும் வராது. இது மற்றொருவரின் குடும்பத்திற்கு வெளிச்சம். பல தொண்டு நிறுவனங்களும், மருத்துவர்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை இரத்த தானம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே பலர் ரத்த தானம் செய்து உயிரை காப்பாற்றி வருகின்றனர். இரத்த தானம் செய்பவர்களுக்கு ஹீமோகுளோபின் அதிகமாக இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இதை அதிகமாக வைத்துக் கொள்ள வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ளலா