Monkey Pox: கேரளா வரை வந்து விட்ட குரங்கம்மை!உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை என்ன?
Monkey Pox: நிபா வைரஸ் தொடங்கி தற்போது உள்ள குரங்கம்மை வரை வெளிநாடுகளில் பரவக்கூடிய நோய்முதலில் கேரள மாநிலத்தையே முதலில் பாதிக்கிறது. ஆப்பிரிக்காவில் இருந்த குரங்கம்மை கேரள மாநிலம் வரை வந்திருப்பது அருகாமையில் இருக்கும் தமிழ்நாட்டிற்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா நாடுகளில் முதன் முதலாக குரங்கம்மை நோய் முதல் முதலாக குரங்குகளிடம் இருந்து இந்நோய் பரவியது. இந்த நோய் பாதிப்பு அதிகமாகும் சமயத்தில் இறப்பு நேரிடும் வாய்ப்பு உள்ளது. நிபா வைரஸ் தொடங்கி தற்போது உள்ள குரங்கம்மை வரை வெளிநாடுகளில் பரவக்கூடிய நோய் முதலில் கேரள மாநிலத்தையே முதலில் பாதிக்கிறது. ஆப்பிரிக்காவில் இருந்த குரங்கம்மை கேரள மாநிலம் வரை வந்திருப்பது அருகாமையில் இருக்கும் தமிழ்நாட்டிற்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். சமீபத்தில் ஐக்கிய அரபு அமீகத்தில் இருந்து திரும்பிய38 வயது இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரங்கம்மை (MPox)
குரங்கம்மை என்பது குறங்குகளிடம் இருந்து பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது நோய் உள்ளவர் அருகில் இருப்பதாலோ, அவர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தும் போதோ எளிமையாக பாவுகிறது. இந்த தொற்று காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, சோர்வு ஆகிய அறிகுறிகளுடன் ஆரம்பிக்கும். தொடர்ந்து முகம், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், இடுப்பு, பிறப்புறுப்பு என உடலின் பல பகுதிகளில் சிறிய நீர் கொப்புளங்கள் தோன்றும்.
இந்த நோய் சின்னம்மை ஏற்படுத்தும் நோய் கிருமி குடும்பத்தை சேர்ந்தது ஆகும். 14 முதல் 20 நாட்களில் குரங்கம்மை அதுவாகவே குணமடையும். சில சமயங்களில் இது மரணத்தை உண்டாக்கும். எனவே உலக சுகாதர நிறுவனம் அவசர நிலையை பிரகடனப் படுத்தியுள்ளது.