Ranbir Kapoor:பிரமோஷனில் பாலியல் அத்துமீறல்; அழுகையில் முடிந்த ரன்பீர் செல்ஃபி!
ரன்பீர் கபூரை இழுத்து பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற பெண்ணின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது
பாலிவிட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர் கபூர். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் இவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட்டும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் செய்தனர். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு ‘ராஹா’ என்று பெயர் வைக்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
ரன்பீரின் நடிப்பில் முன்னதாக வெளியான ‘பிரம்மஸ்திரா’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனை நிகழ்த்தியதாக சொல்லப்பட்டது. ஆனால் படம் நன்றாக இல்லை என்றும் அது தவறான தகவல் என்றும் ஒரு சாரார் குற்றம் சாட்டினர். இந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ரன்பீர் கபூருக்கு தாதா சாகேப் விருதானது வழங்கப்பட்டது. இந்த நிலையில் அது தொடர்பாக பேசிய ரன்பீர் அந்த விருதிற்கு நான் தகுதியானவன் இல்லை என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரன்பீர்கபூர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக து ஜூதி மெயின் மக்கார் வெளியாக இருக்கும் நிலையில் அந்தப்படம் தொடர்பான பிரோமோஷன்களில் பிஸியாக இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக ரன்பீர் மும்பை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். அதில் ஒரு பெண்ணும் ரன்பீருடன் செல்ஃபி எடுத்தார். தொடர்ந்து அந்தப்பெண் திடீரென்று அவரை முத்தமிட முயன்றார். ஆனால் சுதாரித்துக்கொண்ட ரன்பீர் அவரிடம் இருந்து விலகி சென்றார். ஆனாலும் அந்தப்பெண் ரன்பீரின் கையை பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். தொடர்ந்து ரன்பீரின் டி சர்ட்டையும் பிடித்து இழுக்க முயன்றார். ஆனால் ரன்பீர் சிக்கவில்லை.
தொடர்ந்து தான் ரன்பீருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பார்த்த அந்தப்பெண் ரசிகை உடைந்து அழுதார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இது பாலியல் அத்துமீறல் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
தனக்கு தாதா சாகேப் விருது கொடுகப்பட்டது குறித்து ரன்பீர் பேசியதாவது, “ தாதா சாகேப் பால்கே விருது எனக்கு வழங்கப்பட்டதற்கு நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். ஆனால் பிரம்மஸ்திராவிற்காக, நான் இதை வாங்குவதற்கு முழுமையான தகுதியுள்ளவனா? என்பது எனக்கு தெரியவில்லை. காரணம் பிரம்மஸ்திரா படத்தில் என்னுடைய நடிப்பு ஒன்றும் அவ்வளவு பிரமாதமாக அமைந்து விட வில்லை.” என்று அவர் அதில் பேசினார்.
டாபிக்ஸ்